logo
வருமான வரித்துறை என்பது சுதந்திரமான அமைப்பு : பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி.

வருமான வரித்துறை என்பது சுதந்திரமான அமைப்பு : பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி.

25/Mar/2021 06:18:33

ஈரோடு மார்ச்: வருமான வரித்துறை என்பது சுதந்திரமான அமைப்பு என்றும் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்து வருவதாகவும் இதற்கு கருப்புபணம் வைத்திருப்பவர்களே கவலைப்பட வேண்டும் என்றார்   பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற பாரதிய ஜனதா வேட்பாளர் சரஸ்வதியை ஆதரித்து பாஜக தேசிய பொது செயலாளரும் , மேலிட  பொறுப்பாளர் சி.டி.ரவி  பிரசாரம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:ளை சந்தித்த C.T.ரவி , வருமான வரித்துறை என்பது ஒரு  சுதந்திரமான அமைப்பு.  அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற சோதனைகளுத்து கருப்புப்பணம் வைத்துள்ளவர்கள்தான் கவலைப்பட வேண்டும்.

 கருத்துகணிப்பு என்பது சர்வே மட்டும்தான்.  2016 -இல் திமுக தான் வரும் என்றார்கள் ஆனால் அதிமுக தான் வெற்றி பெற்றது என்றார். திமுக என்றாலே  கட்டப்பஞ்சாயத்து , ஊழல் , நில அபகரிப்பு என்பதால் மக்கள் ஆராய்ந்து  வாக்களிப்பார்கள். கோ பேக் மோடி என்று சொன்னாலும் தமிழகத்திற்கு அதிக திட்டங்களை கொடுத்தவர் மோடி. 

மாற்றுகட்சியிலிருந்து பாஜக -விற்கு வந்தாலும் ஜெயிக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும். ஜாதி மத வேறுபாடுயின்றி பிரதமர் மோடி திட்டங்களை செயல்படுத்துகிறார். 11 ஆயிரம் கோயில்கள் ஒரு கால பூஜை கூட இல்லாமல் இருக்கிறது. ஜக்கி வாசுதேவின் கோயில்களை சீரமைப்போம் திட்டத்திற்கு ஆதரவளிப்போம்.

Top