logo
மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த புதுக்கோட்டை தொகுதி மக்கள் நீதிமய்ய வேட்பாளர்

மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த புதுக்கோட்டை தொகுதி மக்கள் நீதிமய்ய வேட்பாளர்

18/Mar/2021 05:58:25

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதிமய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திக் மெஸ் மூர்த்தி  மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை  தாக்கல் செய்தார்.

புதுக்கோட்டை தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் கார்த்திக் மெஸ் எஸ். மூர்த்தி  தனது கட்சியினருடன் டார்ச் லைட்டை கையில் ஏந்தியபடி மாட்டு வண்டியில் வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வந்தார். புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்திலுள்ள அலுவலகத்தில்   புதுக்கோட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான டெய்சி குமாரிடம் வைப்புத்தொகை செலுத்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து வேட்பாளர் நடத்தை தொடர்பான உறுதி மொழியை வாசித்தார்.



இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி  தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணைச் செயலாளர் செந்தில் குமார், புதுக்கோட்டை மத்திய மாவட்ட வழக்குரைஞர்கள்  அணி மாவட்ட செயலாளர் சுரேஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


Top