logo
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் காங்கிரஸ்  வேட்பாளர்  வாக்கு சேகரிப்பு

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

20/Mar/2021 10:30:31


ஈரோடு மார்ச்:ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் பகுதியில், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வீடு, வீடாக சென்று வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டார்.

கருங்கல்பாளையம் பகுதி, காவிரி வீதி, மோசிக்கீரனார் வீதி, கற்பகம் லே–அவுட், கோட்டையார் வீதி, ரங்கநாதன் வீதி, காந்தி சிலை, காரைவாய்க்கால் பகுதி என பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டார்.


அப்பகுதி  மக்களிடம்  வாக்குகள் சேகரித்து வேட்பாளர்  திருமகன் ஈவெரா பேசியதாவது: இப்பகுதியில் புதை சாக்கடை, மின் புதைவட கேபிள் பதிப்பு, ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படவில்லை. இப்பணிக்காக தோண்டியபோது, குடிநீர் இணைப்புகள், கழிப்பிட குழாய்கள், சாக்கடை வாடிகால் போன்றவை முற்றிலும் உடைந்துள்ளன. பொது கழிப்பிடங்கள் சீரமைக்கப்படாமல் உள்ளது. இவற்றை சீரமைக்க, தேவையான நடவடிக்கை மேற்கொள்வேன்.

ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க, இப்பகுதியில் கூடுதல் ரேஷன் கடைகள் அமைத்து தர முயற்சி மேற்கொள்வேன். ரேஷனில் தரமான அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் முழுமையாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வருவாய் துறை உள்ளிட்ட துறைகளில் ஜாதிச்சான்று, வருமானம், இருப்பிடம் போன்ற சான்றுகள் மக்களுக்கு எளிதில் கிடைக்கவும், மாநகராட்சி மூலமான பணிகளை விரைந்து முடிக்க, இங்கேயே எனக்கு ஒரு அலுவலகம் அமைத்து, பணிகளை மேற்கொள்வேன். மக்களுக்காக உழைக்க நான் காத்திருக்கிறேன். அதற்கான வாய்ப்பாக, கை சின்னத்தில் வாக்களித்து  என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.


Top