logo
ஈரோடு ரயில்வே  பணிமனையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கான விழிப்புணர்வு பாதுகாப்பு ஒத்திகை  செயல் விளக்கம்

ஈரோடு ரயில்வே பணிமனையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கான விழிப்புணர்வு பாதுகாப்பு ஒத்திகை செயல் விளக்கம்

25/Mar/2021 05:15:07

ஈரோடு, மார்ச்: ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள பணிமனையில் (கூட்செட்)  ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் விபத்தில் சிக்கினால் அவர்களை எவ்வாறு மீட்பது குறித்த விழிப்புணர்வு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.



இதற்காக ஈரோடு பணிமனையில் உள்ள தண்டவாளத்தில் இரண்டு  ரயில் பெட்டிகளை கவிழ்த்து அதில் சிலர் சிக்கியது போன்றும், அவர்களை மீட்புக் குழுவினர் நவீன எந்திரங்கள் உதவியுடன் உயிரோடு மீட்பது போன்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அரக்கோணத்தில் இருந்து மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர். கவிழ்ந்த ரயில் பெட்டிகளுக்குள் இடிபாடுகளுக்குள் சிக்கி பயணிகள் மரண ஓலம் எழுப்பினர். அப்போது மீட்புக் குழுவினர் நவீன எந்திரங்கள் உதவியுடன் ரயில் பெட்டியை துளையிட்டும், ஜன்னல் கம்பிகளை அறுத்தும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிம் பயணிகளை  மீட்டனர். 

பின்னர் அவர்களை அங்கு தயாராக இருக்கும் மருத்துவ குழுவிடம் அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போன்று  காட்சி உண்மையாகவே விபத்து நடந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டதை போலவே  மீட்பு குழுவினர் செய்து  கட்டினர்.

  இந்த விழிப்புணர்வு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை சேலம் கோட்ட உதவி மேலாளர் அண்ணாதுரை  ஈரோடு ரயில்வே காவல் ஆய்வாளர்  செந்தில்குமார், உதவி ஆய்வாளர்  ராஜேந்திரன் உள்பட ஏராளமான போலீசார், ரயில்வே துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Top