logo
சட்டவிரோதமாக  மதுபானங்களை பதுக்குதல் மற்றும் விற்பனையை தடுக்க சிறப்பு குழு அமைப்பு

சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்குதல் மற்றும் விற்பனையை தடுக்க சிறப்பு குழு அமைப்பு

24/Mar/2021 09:12:44

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக  மதுபானங்களை பதுக்குதல் மற்றும் விற்பனையை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான .பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:

 தேர்தல் ஆணையத்தால் தமிழகசட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி  அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து  தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நேரத்தில் சட்டவிரோதமாக  மதுபானங்களை பதுக்கி வைத்தல், விற்பனை மற்றும் விநியோகம் போன்ற செயல்களைத் தடுக்க  அறிவுறுத்தியுள்ளது. 

அதன்படி சட்டவிரோதமாக  மதுபானங்கனை பதுக்கி வைத்தல், விற்பனை மற்றும் விநியோகம் செய்தல் ஆகியவற்றை தடுக்கும் நோக்கில்  மாவட்ட வாரியாக காவல்துறை மற்றும் ஆயத்தீர்வைத்துறை அலுவலர்களைக்கொண்ட  சிறப்புக்குழு  அமைக்கப்பட்டுள்ளது.  

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்படி குழுவில் அறந்தாங்கி கோட்ட கலால் அலுவலர் க.ராஜேஸ்வரி (அலைபேசி எண். 96984 57799) மற்றும் மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை அலுவலர் முத்துக்கருப்பன் (அலைபேசி எண். 94981 65927) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

எனவே, சட்டவிரோதாக மதுபானங்களை பதுக்கி வைத்தல், விற்பனை மற்றும் விநியோகம் செய்வது தொடர்பாக புகார்களை மேற்காணும் அலுவலர்களிடம் அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம். 

Top