logo
ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் அதிகாரிகள் வீடியோ கேமராவுடன் தீவிர கண்காணிப்பு

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் அதிகாரிகள் வீடியோ கேமராவுடன் தீவிர கண்காணிப்பு

22/Mar/2021 07:53:51

ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் அதிகாரிகள் வீடியோ காமெராவுடன் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகச் சட்டமன்றத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதற்கான அறிவிப்பு கடந்த  மாதம் பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியானது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. 

ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை  வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 2741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழு ,வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

 பொதுமக்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் வினியோக்கப்படுகிறதா என்பது குறித்தும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரத்துக்கு   மேல் கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் சேலை மதுபான வகைகளையும் பணியை செய்து வருகின்றனர். 

இதேபோல் வங்கியில் ரூ .10 லட்சத்திற்கும் மேல் பண  பரிவர்த்தனை நடைபெறுவதையும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அரசியல் கட்சியினரும் பொதுக்கூட்டம் பிரச்சாரம் ஆகியவற்றையும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Top