logo
சித்தோட்டில் அமைக்கப்பட்ட   சேவை சாலை: விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மூலம் அமைச்சர் முத்துசாமி  திறந்து வைத்தார்

சித்தோட்டில் அமைக்கப்பட்ட சேவை சாலை: விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மூலம் அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்

18/Jun/2021 06:10:20

ஈரோடு, ஜூன் சித்தோட்டில் அமைக்கப்பட்ட  தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சேவை சாலையை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை   வரவழைத்து  திறக்கச் செய்தார் அமைச்சர் முத்துசாமி.

ஈரோடு அருகேயுள்ள சித்தோடு பகுதி வழியாக செல்லும் தேசிய நான்கு வழிச்சாலையில் சேவை சாலை இல்லாததால் அடிக்கடி  நேரிடும் விபத்துகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சேவை சாலையை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அந்த கோரிக்கை நிறைவேற்றும் வகையில்  தன்னார்வலர்களின் உதவியுடன் சித்தோடு பகுதியில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து சேலம் மாவட்டம் செல்லும் தேசிய நான்கு வழி சாலையை, ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் முக்கிய சாலையுடன் இணைக்கும் வகையில் 930 மீட்டர் நீளத்தில், 5.5 மீட்டர் அகலத்தில் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டிலான தார்சாலை அமைக்கும் பணி நான்கு நாட்களாக  வேகமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அந்தப்ப பணிகள் முடிவுற்றதையடுத்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற  விழாவில் பங்கேற்ற வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, சித்தோடு தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் இறந்த தங்கராஜ் மற்றும் சபரி ஆகியோரின் குடும்பத்தைச் சார்ந்த பானுபிரியா, மகள் காவியா ஆகியோரை வரவழைத்து  ரிப்பன் வெட்டி  புதிய சாலையை  பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கச் செய்தார்.

 இதுகுறித்து வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறுகையில், இந்த பகுதியில் சேவை சாலையில்லாததால் பொதுமக்கள் சாலையை கடக்கும் போது ஏராளாமான விபத்துகள் நேரிட்டதுஅவ்வாறு நடந்த விபத்தில் பலியான தங்கராஜ் மற்றும் சபரி ஆகியோரை  நினைகூரும் வகையில் இந்த சாலை அவர்களின் குடுப்பத்தினரை  அழைத்து வந்து  தற்போது  திறக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பேரோட்டில் இருந்து நேரடியாக சித்தோடு செல்லும் வழி அடைக்கப்படும். இதனால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இருக்காதுமேலே உள்ள பாலம் வழியாக செல்லலாம்.சாலையில் மக்கள் கவனக்குறைவாகப்  பயணிக்கும் பொழுது விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களும் சாலைகளில் பயணிக்கும் பொழுது பாதுகாப்பாக பயணிக்க வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த பகுதிகளில் விபத்து ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, அதனைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் சு.முத்துசாமி.  இதில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top