logo
ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்து சேவை தொடக்கம் : தயார்நிலையில்  பேருந்துகள்

ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்து சேவை தொடக்கம் : தயார்நிலையில் பேருந்துகள்

29/Jun/2021 10:22:45

சென்னை, ஜூன்: கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், ஆம்னி பேருந்துகளின் சேவை ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 36 ஆயிரமாக இருந்த கொரோனா தொற்று தற்போது 6 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால், மாவட்டங்களை 3 வகையாகப் பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட 11 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடங்கி விட்டது.

அதே போன்று தனியார் மற்றும் ஆம்னி பேருந்து சேவைகள் தொடங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து சேவை ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 மாதங்களாக 4 ஆயிரத்திற்கும் மேலான ஆம்னி பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஆம்னி பேருந்து சேவைகளும் தொடங்கப்படவுள்ளது.

Top