19/Mar/2021 10:02:44
புதுக்கோட்டை மார்ச்: எல்ஐசி பங்குகளை விற்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து புதுக்கோட்டையில் எல்ஐசி ஊழியர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை எல்ஐசி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பபாட்டத்துக்கு காப்பிட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் தஞ்சைக்கோட்ட துணைத்தலைவர் நா.கண்ணம்மா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார்.
கோரிக்கைகளை விளக்கி முதல்நிலை அதிகாரிகள் சங்கம் நிர்வாகி வி. திருப்பதி, வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் சார்பில் ஆனந்தகுமார், காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க கிளைச் செயலாளர் வீர.துரைசிங்கம், லிகாய் முகவர் சங்கம் சார்பில் மதியழகன், அறந்தாங்கி கிளை சார்பில் அருணாசலம் உள்ளிட்டோர் பேசினர்.
வேலைநிறுத்தம் வெற்றி பெற வாழ்த்தி அனைத்து அரசுத்துறை ஓய்வூதியர்கள் சார்பில் ஆர்.சுப்ரமணியன், எம்.முத்தையா, ராஜேந்திர சிங், வங்கி ஊழியர் சங்கம் சார்பில் கே.என்.ராஜேந்திரன், கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ராமதுரை, எல். ஐ. சி ஓய்வூதியர் சங்கம் சார்பில் எம்.ஏ.ரகுமான், முன்னாள் கோட்டச்சங்க துனைத்தலைவர் எம்.அசோகன் ஆகியோர் பேசினர். எம்.குருமூர்த்தி நன்றி கூறினார்.