logo
கோபி அருகே மளிகை கடைக்காரரிடம்  துப்பாக்கி காட்டி பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோபி அருகே மளிகை கடைக்காரரிடம் துப்பாக்கி காட்டி பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

29/Apr/2021 04:51:16

ஈரோடு, ஏப்: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் .கணபதிபாளைத்தில் சந்தோஷ் என்பவரிடம்  மினி சரக்கு வாகன ஓட்டுநர் பிரபு என்பவர் துப்பாக்கியை காட்டி பணம் கேட்டு மிரட்டியபோது  பொதுமக்கள் விரட்டியதால் தப்பியோடிய ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டியில் மளிகைக்கடை நடத்தி வருபவர் சந்தோஷ். இவர் மினி சரக்கு வாகனம் வாங்க ஆசைப்பட்டு துறையம்பாளையம் பகுதியை சேர்ந்த மினி சரக்கு வாகன ஓட்டுநர் பிரபு என்பவரிடம் கடந்த வாரம் ரூ.2.50 லட்சம் கொடுத்துள்ளார்.

 ஒரு வார காலமாக வாகனம் வாங்கிக்கொடுக்காமல் அலைக்கழித்துவிட்டு பு மேலும் ரூ.2 லட்சம் பணத்தை  சந்தோஷிடம் பிரபு கேட்டுள்ளார். அதற்கு சந்தோஷ் தன்னிடம் தற்போது இவ்வளவு தொகை இல்லை எனவும் .கணபதிபாளையத்தில் உள்ள தனது நண்பர் ராஜகுருவிடம் கடன் வாங்கித்தருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரபு சந்தோஷை சந்தித்து தனக்கு உடனடியாக பணம் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு சந்தோஷ் .கணபதிபாளையம் சென்று பணம் வாங்கி வருகிறேன் என தெரிவித்தால் பிரபுவின் இருசக்கர வாகனத்தில் இருவரும் .கணபதிபாளைம் நோக்கி சென்றுள்ளனர். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய பிரபு தனது வாகனத்தின் இருக்கையின் அடியில் வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து புல்லட்களை லோடு செய்த படி பணம் தரவில்லையெனில் சுட்டுக்கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


அதில் பயந்து போன சந்தோஷ் பிரபுவை அழைத்துக் கொண்டு .கணபதிபாளையம் வந்துள்ளார். அங்கு பணம் கேட்டு சந்தோஷின் நண்பர் ராஜகுருவிடம் பேசிக்கொண்டிருந்த போது பிரபு துப்பாக்கி வைத்திருக்கும் விஷயத்தை  ராஜகுருவிடம் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

 பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்தபோது துப்பாக்கியுடன் இருந்த இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு அங்கிருந்து பிரபு தப்பியோடினார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த  கோபிசெட்டிபாளையம் போலீஸார்  சம்பவ இடத்திற்கு வந்து துப்பாக்கியுடன் இருந்த இருசக்கர வாகனத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தப்பியோடிய  வேன் ஓட்டுநர் பிரபுவை தேடி வருகின்றனர்.  இதனால் .கணபதிபாளையம் பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது.

Top