logo
ஈரோடு மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 92 துணை ராணுவ வீரர்கள் வருகை

ஈரோடு மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 92 துணை ராணுவ வீரர்கள் வருகை

28/Feb/2021 07:34:18

ஈரோடு,  பிப்:தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அனைத்து மாவட்டத்திலும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். இதில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை, பவானி, மொடக்குறிச்சி, அந்தியூர், கோபி, பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து துணை ராணுவத்தினர் 92 பேர் இன்று அதிகாலை சிறப்பு ரயில் மூலம் ஈரோடு ரயில் நிலையம்  வந்தடைந்தனர். 

அனைவரையும், ஈரோடு மாவட்ட போலீஸ் அதிகாரிகள் வரவேற்று, போலீஸ் வாகனங்களில் அழைத்து சென்று கோபியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதேபோல் மற்றொரு ரயிலில் 130 பேர் கொண்ட துணை ராணுவ குழுவினர் ஈரோடு வந்தனர். அவர்கள் நாமக்கல் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டெல்லியில் இருந்து 260 பேர் கொண்ட இரு குழுவினர் ஈரோடு வந்தனர். அவர்கள் திருப்பூர் மாவட்ட பாதுகாப்பு பணிக்கு அந்தந்த மாவட்ட போலீசார் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Top