logo
அதிமுக ஆட்சியை  மக்கள் விரும்பவில்லை: அந்தியூரில்  திமுக எம்.பி. கனிமொழி பேட்டி

அதிமுக ஆட்சியை மக்கள் விரும்பவில்லை: அந்தியூரில் திமுக எம்.பி. கனிமொழி பேட்டி

30/Nov/2020 10:58:26

ஈரோடு: அதிமுக ஆட்சியை பொது மக்கள் விரும்பவில்லை திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்க மக்கள் முடிவெடுத்துள்ளனர் என்றார் திமுக எம்.பி. கனிமொழி.

ஈரோடு மாவட்டம்  அந்தியூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி செ?ய்தியாளர்களிடம் மேலும் பேசியதாவது: தற்போதைய அதிமுக ஆட்சியை பொது மக்கள் விரும்பவில்லை. ஆட்சியை கலைத்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்க மக்கள் முடிவெடுத்துள்ளனர்.பொதுமக்களின் எதிர்பார்ப்பை எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நிறைவேற்றி, நல்ல பல திட்டங்களை செயல்படுத்த திமுக அரசு காத்துக்கொண்டிருக்கிறது.

மேலும் அந்தியூர் சந்தையில் சுகாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது, வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு விரைந்து செயலாற்ற வேண்டும் என்றார்.

முன்னதாக, வியாபாரிகளிடம் பொருட்களின் விற்பனை குறித்தும், விலை நிலவரம் பற்றியும், அடிப்படை வசதிகளான சுகாதாரம் உட்பட நிறைகுறைகள் ஆகியவற்றை கேட்டறிந்தார்.அப்போது ஒரு சில வியாபாரிகள் சந்தையை இடம் மாற்றக் கூடாது எனவும், வேறு இடத்திற்கு சந்தையை கொண்டு செல்லும் பட்சத்தில் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் கூறினர். இதைக் கேட்ட எம் பி கனிமொழி, சந்தையை இதே இடத்தில் தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார் கனிமொழி.வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவன் அந்தியூர் ஒன்றிய செயலாளர்  ஜி வெங்கடாசலம் நகரச் செயலாளர் காளிதாஸ் உட்பட திமுகவினர் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்

Top