15/Mar/2021 01:43:47
புதுக்கோட்டை, மார்ச்:சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பதை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு கையெழுத்தியக்கத்தை மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் நடத்தும் அலுவலர் உமா மகேஸ்வரி தொடங்கி வைத்தார்.
ஏப்ரல் -6 இல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 100% வாக்களிப்பது குறித்து கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டனர். இதனையொட்டி 100% வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.