logo
திமுக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் வேலை: தமாகா வேட்பாளர்   யுவராஜா

திமுக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் வேலை: தமாகா வேட்பாளர் யுவராஜா

14/Mar/2021 06:18:51

ஈரோடு மார்ச்:   திமுக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல் என்றார் ஈரோடு கிழக்கு தொகுதி தமாகா வேட்பாளர்  யுவராஜா கூறினார்.

 ஈரோட்டில்  செய்தியாளர்களிடம்  மேலும் கூறியதாவது தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், தமாகா- வுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியதற்கு நன்றி. தமாகா சார்பில் இரட்டை இலை சின்னத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு  போட்டியிடுகிறேன் இத்தொகுதியில் பெருவாரியான  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறஅதிமுக மற்றும் தமாகாவினர் பாடுபடுவார்கள்.

  அதிமுக கூட்டணி வெற்றிக் கூட்டணி மீண்டும் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பார். முதல்வர் அனைத்து குடும்ப தலைவிக்கும் ரூ.1500,    வருடத்திற்கு 6  சிலிண்டர் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் இது பொது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அவர் அறிவித்து செயல்படுத்தினார் எனவே அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

 திமுக வெளியிட்டுள்ள  தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயலாகும் ஏற்கெனவே பல்வேறு நல திட்டங்களை அதிமுக அரசு அறிவித்துள்ளது.  அதையே  காப்பியடித்து  மக்களை ஏமாற்றுவது  போல  திமுவின் அறிக்கை உள்ளது.

அதிமுக சிறுபான்மையினருக்கு பாதுகாவலராக உள்ளதால் சிறுபான்மை வாக்குகள் அனைத்தும் அதிமுக கூட்டணிக்கு கிடைக்கும்  என்றார் யுவராஜா. இதில், அதிமுக ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் கே வி ராமலிங்கம், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசு, முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர் தமாகா மாவட்ட தலைவர் விஜயகுமார்  மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்

Top