13/Mar/2021 05:12:07
ஈரோடு, மார்ச்:ஈரோடு மாவட்டத்தில் மின்னணு வாக்காளர் அட்டை பதிவிறக்கத்துக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தங்கள், புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது.
சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே பெறப்பட்ட வாக்காளர் சேர்ப்பு, திருத்தம் தொடர்பான மனுக்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவற்றில் திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக சனிக்கிழமை 2,741 ஓட்டுச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடந்தது.
திருத்தங்களுக்கான படிவம் வழங்கி பெறப்பட்டது. புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் பாகம், பக்கம் எண் போன்றவைகளை குறித்து செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு, மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டது.
வாக்காளர் பெயர், தந்தை பெயர், தொகுதி போன்ற விபரங்களை பதிவு செய்தால், அவர்களது மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தினர். இப்பணிகளை ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் உட்பட பலர் ஆய்வு செய்தனர்