logo

ஈரோடு மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நாளை வருகை

11/Mar/2021 05:47:31

ஈரோடு, மார்ச்: சட்டமன்றத் தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்கள் நாளை(மார்ச்.12)  வரவுள்ளனர்

 சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தால்  தமிழகம் முழுவதும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். அதன்படி பொது பார்வையாளர்களாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு விஷால் ககன், ஈரோடு மேற்கு தொகுதிக்கு அடோனு சட்டர்ஜி, மொடக்குறிச்சி ,பெருந்துறை தொகுதிகளுக்கு மனோஜ் குமார், கோபி, பவானி சாகர் தொகுதிகளுக்கு நர்பு வாங்டி புடியா நியமிக்கப்பட்டுள்ளனர்.

செலவின பார்வையாளர்களாக கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்கு அரூப் சட்டர்ஜி, மொடக்குறிச்சி, பெருந்துறை  தொகுதிகளுக்கு சஞ்சீவ் குமார் தேவ், அந்தியூர் கோபி தொகுதிகளுக்கு அர்ஜூன் லால் ஜட் மற்றும் பவானி, பவானி சாகர் தொகுதிகளுக்கு பவானி சங்கர் மீனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

காவல் பார்வையாளர்களாக 8 தொகுதிக்கும்  சுனில்குமார் நாயக் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் செலவின பார்வையாளர்கள் (வெள்ளிக்கிழமை)  ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மற்ற தேர்தல் பார்வையாளர்களும் ஈரோடுக்கு வருகை தரவுள்ளனர்.

Top