11/Mar/2021 03:59:40
ஈரோடு, மார்ச்: தமிழக சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளராக, ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான கே.வி.ராமலிங்கம் மீண்டும் போட்டியிட வாய்ப்புக்கிடைத்துள்ளது.
சென்னையிலிருந்து போட்டியிட வாய்ப்பைப் பெற்றும் ஈரோடுக்கு திரும்பிய கே.வி. ராமலிங்கம் வியாழக்கிழமை காலை ஈரோட்டில் உள்ள மாவட்ட கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மறைந்த முதல்வா் ஜெயலிதா, எம்.ஜி.ஆர். உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
அங்கு திரண்டிருந்த அதிமுகவினர் கே.வி. ராமலிங்கத்துக்கு சால்வை அணிவித்து, இனிப்பு வழங்கி வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.