06/Mar/2021 06:54:07
புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்களின் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அதில், சௌராஷ்ட்ரா சபை சார்பில் மண்டகப்படி விழா சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி மாணவ,மாணவியருக்கான பல்வேறு போட்டிகளும் இசைநிகழ்ச்சிகளும் கலைநிகழ்ச்சிகளும் பரிசளிப்பும், அன்னதானமும் நடைபெற்றது. ஆலயத்தில் ருத்ர ஜெப பாராயணம் அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் மஹா தீபாரதனை நடந்தது.
பின்னர் ,உற்சவர் முத்துமாரியம்மன் சுவாமி வீதி உலா வான வேடிக்கையுடன் மேளதாளத்துடன் நடைபெற்றது.சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தலைவர் கே.பி.அசோகன் தலைமையில் சௌராஷ்டிரா சபையைச் சேர்ந்த நிர்வாகிகள் செய்திருந்தனர்.