logo
மல்லிகைப்பூ கிலோ ரூ. 2047 விலைக்கு விற்பனை: ஈரோடு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி .

மல்லிகைப்பூ கிலோ ரூ. 2047 விலைக்கு விற்பனை: ஈரோடு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி .

17/Dec/2020 07:54:30

ஈரோடு, டிச: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் தமிழகத்தில் கோவை திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் பனிப்பொழிவு காரணமாக கடந்த சில நாட்களாக மல்லிகைப் பூக்களின் வரத்து குறைந்தது இதன் காரணமாகவும்  அமாவாசை என்பதன் காரணமாகவும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து மல்லிகைப்பூ கிலோ 2047 ரூபாய்க்கு விற்பனையானது.

சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டின் இன்றைய விலை நிலவரப்படி மல்லிகைப்பூ கிலோ 2047 ரூபாய்க்கும், முல்லை கிலோ 760 ரூபாய்க்கும், காக்கடா கிலோ 750 ரூபாய்க்கும், செண்டு கிலோ 75 ரூபாய்க்கும், ஜாதி முல்லை கிலோ 800 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 500 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனையானது. பூக்களின் விலை உயர்வால் சத்தியமங்கலம் மலர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Top