logo
அறந்தாங்கி அருகே உடல் நலக்குறைவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  அமைப்பினர்

அறந்தாங்கி அருகே உடல் நலக்குறைவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர்

01/Jun/2021 07:47:12

புதுக்கோட்டை, ஜூன்: அறந்தாங்கி அருகே உடல் நலக்குறைவால் இறந்தவரின் உடலை  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  முன்களப்பணியாளர்கள்  செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்தனர்.

 புதுக்கோட்டை மாவட்டம்அறந்தாங்கி தாலுகா, குளமங்களம் வடக்கு ஊராட்சியை சேர்ந்த செல்லக்கண்ணு மனைவி நாகம்மாள் (85) என்பவர் உடல் நலக்குறைவால்  உயிரிழந்தார்..உயிரிழந்த நபரின் உடலை அடக்கம் செய்ய உதவிட வேண்டுமென அவரது குடும்பத்தினர்  குளமங்கலம் மேற்கு  ஊராட்சி மன்ற தலைவர்  செல்வக்குமார்  மூலம்    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  நிர்வாகிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.


இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மாவட்ட நிர்வாகிகள் வழிகாட்டுதலோடு- மேற்பனைக்காடு, கீரமங்கலம், காசிம்புதுப்பேட்டை தவ்ஹீக் ஜமாஅத் கிளைகளின் முன் களப்பணியாளர்கள், உயிரிழந்தவரின் உடலை, குளமங்கலம் வடக்குப் பகுதியில் உள்ள மயானத்தில்  முறையில் அடக்கம் செய்தனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ), 9750572450, 9159396604,7373608981.. மேற்பனைக்காடு, கீரமங்கலம், காசிம்புதுப்பேட்டை கிளைகள். புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ) கொரோனா பேரிடர் உதவி மையம் -73733 11668 .

 

 

 

 

Top