logo
 தேர்தலுக்காக அதிமுக அரசு மீது ராகுல்காந்தி குற்றம் சுமத்துகிறார்: ஜி கே வாசன்

தேர்தலுக்காக அதிமுக அரசு மீது ராகுல்காந்தி குற்றம் சுமத்துகிறார்: ஜி கே வாசன்

27/Jan/2021 07:31:09

 ஈரோடு, ஜன: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தேர்தலுக்காக அதிமுக அரசு மீது குற்றம் சுமத்துகிறார் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில தலைவர் ஜி.கே வாசன்.

 ஈரோட்டில் செய்தியாளர்களிடம்  மேலும் அவர் கூறியதாவது: ராகுல் காந்தி தமிழகத்தில் பல இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அப்போது அதிமுக அரசுக்கு எதிராக அவர் விமர்சனம் செய்துள்ளார். இது தேர்தலுக்காகவும் அரசியலுக்காகவும் பேசப்பட்டது. ஒரு அகில இந்திய தலைவர் வரும்போது அந்தந்த மாநில தலைமை மற்றும் மாவட்ட தலைமை இதற்கான ஏற்பாடுகளை செய்யும். எனவே அவர் வரும் போது அதிக கூட்டம் சேர்ந்தது என்பது ஆச்சரியத்திற்குரியது அல்ல.

 மத்திய அரசு வேளாண் சட்டங்களுக்கு தீர்க்க பலமுறை விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலையும் அதை ஏற்றுக் கொண்டது ஆனால் விவசாயிகள் சிலரின் தூண்டுதலால் போராட்டத்தை தொடர்ந்து நடத்துகின்றனர்.  குடியரசு தினத்தன்று நாட்டின் மதிப்பை பாதிக்கும் வகையில் சில சமூக விரோத சக்திகள் தில்லியில் வன்முறையில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது.

 ஒரு சில மாநில விவசாயிகள் மட்டுமே இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். எனவே இதில் சுமூக தீர்வு ஏற்பட அனைவரும் முயற்சிக்க வேண்டும். திமுக தலைவர் தேர்தல் மூன்று மாதம் இருக்கையில் மக்களிடமிருந்து குறைதீர்ப்பு மனுக்களை பெற உள்ளதாக கூறியிருப்பது வாக்காளர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை தேர்தல் நாடகமாகவே மக்கள் கருதுகின்றனர். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் முதல்வர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைப்பதை வரவேற்கிறேன். சசிகலா விடுதலை எந்த மாற்றத்தை ஏற்படுத்தாது என்றார் ஜி.கே. வாசன். இதில், நிர்வாகிகள் விடியல் சேகர், சந்திரசேகர், எம். யுவராஜா, ஆறுமுகம், விஜயகுமார் உள்பட பலர்  உடனிருந்தனர். 


Top