25/Feb/2021 07:08:18
புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டையில் இயங்கி வரும் தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சிக்கழகம் எனும் தொண்டு நிறுவனம் சார்பில் புதுகை பண்பலை வானொலி (91.2 FM) சேவை தொடங்கப்பட்டுள்ளது..
புதுக்கோட்டை கூடல் நகரில் உள்ள அந்த நிறுவனத்தில் இயக்குநரும் நமது அறிவியல் மாத இதழ் ஆசிரியருமான விஜிக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கவிஞர் தங்கம்மூர்த்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பண்பலை வானொலி சேவையை தொடங்கி வைத்தார்.
நிகழ்வில், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். ராஜ்குமார், வாசகர் பேரவை செயலர் பேராசிரியர் எஸ்.விஸ்வநாதன், கவிஞர்கள் க. முருகபாரதி புதுகைப் புதல்வன் உள்பட கலந்து கொண்டு வாழ்த்தினர்.