29/Apr/2021 09:10:51
ஈரோடு, ஏப்: 3 ஆயிரம் சதுரஅடி கடைகளை மூட உத்தரவிட்டதன் காரணமாக ஈரோடு மாநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஜவுளி மற்றும் நகைக்கடைகள் அடைக்கப்பட்டன.
இதையடுத்து, 3000 சதுரஅடிக்கு மேல் உள்ள கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது இந்த நடைமுறை புதன்கிழமை அமலுக்கு வந்தது. அதன்படி
ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 3000 சதுர
அடிக்கு மேலுள்ள வணிக நிறுவனங்கள், ஜவுளி
கடைகள் நகைக் கடைகள் ஆகியவை மூட வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
இதைப்போல் மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் இந்த நிறுவனங்களில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இதேபோல் கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், மொடக்குறிச்சி உள்பட ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பெரிய கடைகளும் அடைக்கப்பட்டன