logo
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  73 -ஆவது பிறந்தநாள்: அதிமுக எம்எல்ஏ-க்கள் தலைமையில் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 -ஆவது பிறந்தநாள்: அதிமுக எம்எல்ஏ-க்கள் தலைமையில் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

24/Feb/2021 11:17:19

ஈரோடு, பிப்: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73- ஆவது பிறந்த நாள் விழா ஈரோட்டில் புதன்கிழமை  கொண்டாடப்பட்டது. 

ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா உருவச்சிலைக்கு எம்எல்ஏ-க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு,  ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து எம்ஜி ஆர் உருவச்சிலைக்கும் எம்எல்ஏ-க்கள் மாலை அணிவித்தனர். 


இதைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள ஜெயலலிதா உருவச்சிலைக்கும் எம்எல்ஏ-க்கள் கே.வி. ராமலிங்கம் , கே.எஸ்.தென்னரசு,  ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து எம்.ஜி.ஆர், அண்ணா, பெரியார் ஆகியோர் சிலைகளுக்கும்  எம்எல்ஏ-க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


இதில், முன்னாள் எம்எல்ஏ- பாலகிருஷ்ணன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே சி பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவ மூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், ஜெயராஜ், கோவிந்தராஜ், முருகசேகர், தங்கமுத்து, ராமசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவனை மாவட்ட இணைச்செயலாளர் யுனிவர்சல் நந்தகோபால், உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இதைத்தொடர்ந்து எம்எல்ஏ-க்கள் தலைமையில் பல்வேறு இடங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Top