logo
ஜெயலலிதா  பிறந்தநாள்: ஈரோட்டில் ஜெயலலிதா உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

ஜெயலலிதா பிறந்தநாள்: ஈரோட்டில் ஜெயலலிதா உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

24/Feb/2021 10:47:00

ஈரோடு, பிப்:மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73- ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தப்பட்டது.

ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அவரது சிலைக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இணைச் செயலாளர் வண்ணமலர், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சன்ரைஸ் லோகநாதன், பேரவைச் செயலாளர் நடராஜ், இளைஞரணி செயலாளர் முகமது ராஜா ,பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர் ,இளம்பெண்கள் மாவட்ட தலைவி சங்கீதா, இளம் பெண்கள் பாசறை செயலாளர் அகிலா, தகவல் தொழில்நுட்பப் பிரிவு பெண்கள் செயலாளர் ஸ்ரீலதா, மகளிர் அணி செயலாளர் கல்பனா, ஒன்றிய கழக தொழிற்சங்கச் செயலாளர் ராமசாமி.

 பொறியாளர் அணி செயலாளர் வி ஆர். செந்தில்குமார் ,செயலாளர்கள் பூ. பாலமுருகன், பாபு என்கிற ராஜராஜன், பகுதி  செயலாளர்கள் நேரு, ஷாஜகான், அய்யாசாமி சக்திவேல் மீரான், சீனிவாசன், குட்டி ராஜா.  பேரூர் கழக செயலாளர்கள் சண்முகம், சங்கர் குப்புசாமி மோகன் வெற்றிவேல் மகளிர் அணி நிர்வாகிகள் குப்பாயி அம்மாள், வசந்தா, மாபு ஜான் இலாகிதா, வசந்தா ,ரம்யா மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் சாதிக் வட்டக் கழக பொறுப்பாளர்கள் மாவு பாஜ்ஜா, தனபால் ,கோவிந்தராஜ், தர்மராஜன், இளைஞரணி துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதேபோல், ஈரோடு தமிழக மக்கள்  முன்னேற்றக்கழகம் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட தலைவர்  அ.செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாவட்டச் செயலாளர் மயில் துரையன், மாநகர இணைச்செயலாளர் குணா, மாவட்ட தொழிற்சங்க பொருளாளர் குமார், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் கந்தசாமி, சென்னிமலை ஒன்றிய பொறுப்பாளர் அப்பார் ரங்கசாமி, வெங்கடாஜலபதி, மாநகர வார்டு செயலாளர் துரைசாமி, ரஞ்சித் வெண்டிபாளையம் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Top