15/Apr/2021 10:12:06
குமரிகடல் பகுதியில் உருவாகியுள்ள வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 10 மாவடங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் (ஏப்.15) இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி நீடிப்பதால் அடுத்த மூன்று முதல் 4 மணி நேரத்து மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று தமிழக உள் மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் எனவும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர். திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.