logo
பெருந்துறை சட்டப்பேரவை தொகுதி  தேர்தல்:தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை

பெருந்துறை சட்டப்பேரவை தொகுதி தேர்தல்:தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை

23/Feb/2021 07:16:29

ஈரோடு, பிப்:ஈரோடு தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட பெருந்துறை சட்டப்பேரவைத்தொகுதி தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் பெருந்துறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெருந்துறையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டக்கழக அவைத்தலைவர் மற்றும் பெருந்துறை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நந்தகுமார் மற்றும் மாவட்ட கழக பொருளாளர் ராஜேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். 

ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கழக துணைச் செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர் பார்த்தசாரதி, கழக தேர்தல் பணிக்குழு செயலாளர் சிங்கை சந்துரு .

கழக மாநில மகளிரணி துணைச் செயலாளர் மற்றும்ஈரோடு தெற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் வனிதாதுரை ஆகியோர்  கலந்து கொண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைப்பது மற்றும் தேர்தல் பணிகள் குறித்து கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.  இதனையடுத்து 50 மேற்பட்டோர் தேமுதிகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

Top