19/Feb/2021 07:54:03
புதுக்கோட்டை, பிப்: பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து புதுக்கோட்டையில் வங்கிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்த நிதிநிலை(பட்ஜெட்) அறிக்கையில் 2 பொதுத் துறை வங்கிகள் எல்டிபி ஐ. வங்கி ஆகியவற்றை தனியார் மயமாக்குவதாக அறிவிக்கப்பட்டது கண்டித்தும் மற்றும் எல்ஐசி. ஜிஐசி.உள்ளிட்ட பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக உயர்த்த அனுமதியளிக்கப்பட்டதை கண்டித்தும் வங்கிகள் கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.