21/Apr/2021 06:33:01
ஈரோடு ஏப்: சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்து நின்ற ஒற்றை காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொள்வதும் சாலையைக் கடப்பது வாடிக்கையான நிகழ்வாகி வருகிறது.
இந்நிலையில், சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆசனூர் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சாலைக்கு வந்த ஒற்றை காட்டுயானை அவ்வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்து நின்றது.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். பின்னர் சிறது நேரம் சாலையில் வலம் வந்த காட்டுயானை பின்பு தானகவே காட்டுக்குள் சென்றது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.