logo
எல்ஐசி பங்கு விற்பனையைத் தடுத்து நிறுத்த அகில இந்திய காப்பீடு ஊழியர் சங்கம் கோரிக்கை

எல்ஐசி பங்கு விற்பனையைத் தடுத்து நிறுத்த அகில இந்திய காப்பீடு ஊழியர் சங்கம் கோரிக்கை

17/Feb/2021 10:22:24

புதுக்கோட்டை, பிப்:  காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டைக் கண்டித்து திருச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசரை சந்தித்து செவ்வாய்க்கிழமை எல்ஐசி ஊழியர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு உயர்வு மற்றும் எல்ஐசி பங்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் விடுத்த அறைகூவலின் அடிப்படையில், எல்ஐசி தஞ்சைக் கோட்டம் சார்பாக செவ்வாய்க்கிழமை யன்று  சு.திருநாவுக்கரசர் எம்பி யை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த மனமேடை கிராமத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் சங்கத்தின் புதுக்கோட்டை கிளை செயலாளர்; வீர.துரைசிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Top