logo
காவல்துறையினர் மீது சாலையோர வியாபாரிகள் ஆட்சியரிம் புகார் மனு

காவல்துறையினர் மீது சாலையோர வியாபாரிகள் ஆட்சியரிம் புகார் மனு

16/Feb/2021 10:35:23

புதுக்கோட்டை, பிப்:காவல்துறையினர்   தரக்குறைவாக பேசி சாலையோரவியாபாரிகளை மிரட்டுவதாகவும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமனக் கோரி  புதுக்கோட்டை மாவட்ட வியாபார தொழிலாளர் சங்க மாவட்ட செயலர்  எம்.என். ராமச்சந்திரன் தலைமையில்   200 -க்கும் மேற்பட்டடோர்  மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்தனர்.

புதுக்கோட்டை நகர் பகுதி முழுவதும் 550 -க்கும் மேற்பட்ட சாலையோரங்களில் தெரு வியாபாரிகள் கடை நாள்தோறும் அன்றாட பிழைப்புக்காக வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள தெரு வியாபாரிகளிடம் 30-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அவர்களை தகாத வார்த்தைகளை கூறி கடையில் உள்ள பொருள்களை காலால் எட்டி உதைத்துத் தள்ளி மிரட்டி வருகின்றனர். 

இதனால் அன்றாடம் பிழைப்பு நடத்த முடியாமல் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதே போன்று தொடர்ந்து மிரட்டல்களும் அச்சுறுத்தலும் காவல்துறை மூலம் தொடர்வதால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கு வேண்டும். அச்சுறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவித்துள்ளனர்.


Top