13/Feb/2021 01:13:52
ஈரோடு பிப்: ஈரோடுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வருகையையொட்டி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட திமுகஅலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வருகிற 21-ஆம் தேதி பிற்பகலில் பெருந்துறையில் நடைபெற உள்ள உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடத்துவது குறித்தும் மார்ச் 1 -ஆம் தேதி தளபதி மு.கஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்துவது குறித்தும், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற எவ்வாறு பாடுபட வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டது..
இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்எல்டி.சச்சிதானந்தம், திமுக மாநில கொள்கைபரப்பு அணி இனை செயலாளர் வி.சி. சந்திரகுமார், மாநில இலக்கிய அணி துனை தலைவர் ஈரோடுஇறைவன், மாவட்ட துணைசெயலாளர்கள் செந்தில்குமார், சின்னையன், செல்லபொன்னி, பொதுகுழு உறுப்பினர்கள் திண்டால் மணிராசு, பத்மநாதன்.
வில்லரசம்பட்டி முருகேஷ், மாவட்ட அவைதலைவர் குமார்முருகேஷ், மாவட்ட பொருளாளர் ப.க.பழனிசாமி, மாவாட்ட விவசாய அணி அமைப்பாளர் சண்முகம், மாநகரசெயலாளர் சுப்பிரமணி, தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ், தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் இளமதி, மற்றும் ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், களக நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.