logo
ஏப்ரல் 4-ஆம் தேதியிலிருந்து தேஜஸ் ரயில் திண்டுக்கல்லில் நின்று செல்லும்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

ஏப்ரல் 4-ஆம் தேதியிலிருந்து தேஜஸ் ரயில் திண்டுக்கல்லில் நின்று செல்லும்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

09/Feb/2021 11:38:10

சென்னை -மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில் ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் கொடைக்கானல் ரோடுக்கு பதிலாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது

தேஜஸ் ரயிலானது, சென்னையிலிருந்து மதுரைக்கு வியாழக்கிழமை தவிர பிற நாள்களில் காலை 6 மணிக்கு புறப்படுகிறது. இதேபோல் மதுரையிலிருந்து சென்னைக்கு மாலை 3 மணிக்கு புறப்படும்  இந்த ரயிலானது திருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே வழக்கமாக நின்று சென்றது.

இந்நிலையில், வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் சோதனை முயற்சியாக கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்திற்கு பதிலாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Top