logo
புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஒரே நாளில்  426 பேருக்கு கொரோனா தொற்று: 4 பேர் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 426 பேருக்கு கொரோனா தொற்று: 4 பேர் உயிரிழந்தனர்.

19/May/2021 09:27:04

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஒரே நாளில் 426 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மாவட்டத்தில்  பலி எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில்  நேற்றுவரை  206 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.. மருத்துவமனை மற்றும் வீடுகளில் 2,453 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில்  4 பேர் உயிரிழந்ததையடுத்து  மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Top