logo
அதிமுக கொடி விவகாரம் சசிகலா மீது காவல்துறை  நடவடிக்கையா..?

அதிமுக கொடி விவகாரம் சசிகலா மீது காவல்துறை நடவடிக்கையா..?

07/Feb/2021 06:54:00

சென்னை, பிப்: அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளை தவிர மாற்று இயக்கத்தினர் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.


பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி வெளிவந்த சசிகலா தமது காரில் அதிமுக கொடியை பறக்கவிட்டது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பில் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.


இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது: சசிகலா தமது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியுள்ளார். அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளை தவிர மாற்று இயக்கத்தினர் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது.

இதனடிப்படையில் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என அதிமுக சார்பில் தமிழக டிஜிபி

யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சசிகலா அதிமுகவில் உறுப்பினர் இல்லை; உறுப்பினர் இல்லாத நபரை நாங்கள் ஏன் நீக்க வேண்டும்  என்று கே.பி. முனுசாமி கேள்வி யெழுப்பியுள்ளார்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறும்போது, சசிகாலாவை இடைக்கால பொதுச் செயலாளரா

கவும், தினகரனை துணை பொதுச் செயலாளராகவும் நியமித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  இதற்கு மேல் சசிகலா ஐ.நா சபை செல்லலாம் அல்லது மன்னார்குடியில் கட்டபஞ்சாயத்து நடத்தலாம் என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

கண்டவர்களை எல்லாம் கட்சியில் சேர்க்க முடியாது: அதிமுகவின் மற்றொரு மூத்த தலைவர் மதுசூதனன் கூறும்போது, கண்டவர்களை யெல்லாம் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள முடியாது. சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் என்று காட்டமாக கூறியுள்ளார்.

Top