logo
வகுப்புகளை புறக்கணித்து புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வகுப்புகளை புறக்கணித்து புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

28/Feb/2021 10:45:58

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்காம் பருவ நிலுவை தேர்வுக்கான கட்டணம் செலுத்தியும் மீண்டும் கட்டணத்தை செலுத்த கூறும் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்காம் பருவம் நிலுவை தேர்வுக்கான கட்டணம் செலுத்தியும் மீண்டும் அக் கட்டணத்தை செலுத்த செல்வதாக கூறப்படுகிறது அதேபோன்று நிலுவை தேர்வுகளில் தேர்ச்சி என அறிவித்தும் மீண்டும் தேர்வினை எழுத செல்லும் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மேலும் குடிநீர் கழிப்பறை வசதிகள் சுத்தம் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரி வாசலில் முன்பு வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Top