logo

மத்திய அரசைக்கண்டித்து புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 100 பேர் கைது

06/Feb/2021 11:35:13

புதுக்கோட்டை, பிப்: மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று  போராடும்  விவசாயிகளுக்கு எதிராக போடப்படும் பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும்விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக டெல்லியில் 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.  இந்நிலையில் ஜனவரி 26-ஆம் தேதி நடந்த டிராக்டர் போராட்டத்தின் போது வன்முறைகள் வெடித்தது போராடும் விவசாயிகள் மீது. போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய அரசு. உடனடியாக வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாக ரத்து செய்யக்கோரியும் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து போராடிய விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பின.ர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதோடு அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.  


Top