31/Jan/2021 10:31:00
புதுக்கோட்டை, ஜன: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சிமொழித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நிலை அலுவலகமான மாவட்டப் பதிவாளர் (தணிக்கை) துறையை பாராட்டி அரசின் கேடயத்தை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:
தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கி வரும் மாவட்ட நிலை அலுவலகம் ஒன்று ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2018 -ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட நிலை அலுவலகமாக மாவட்டப் பதிவாளர்(தணிக்கை) தேர்வு செய்யப்பட்டது..
இதனைத் தொடர்ந்து 2018 -ஆம் ஆண்டு சிறந்த செயல்பாட்டுக்காக மாவட்ட நிலை அலுவலகத்திற்கான கேடயம் புதுக்கோட்டை மாவட்டப் பதிவாளர் (தணிக்கை) குமாரிடம் வழங்கப்பட்டது என்றார் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் நாகராசன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.