logo
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜூன் 26-இல் ஒருமைப்பாடு நாள் ஆர்ப்பாட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜூன் 26-இல் ஒருமைப்பாடு நாள் ஆர்ப்பாட்டம்

24/Jun/2021 08:59:57

புதுக்கோட்டை, ஜூன்: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆதரவாக   ஜூன் 26-இல் ஒருமைப்பாடு நாள் ஆர்ப்பாட்டம் நடத்துவதென அனைத்து தொழில் சங்கங்கள்  அறிவித்துள்ளன.
புதுக்கோட்டையில் மாவட்ட தொமுச தலைவர் அ.ரெத்தினம் தலைமையில் நடைபெற்ற அனைத்துத்தொழில்சங்கங்களின் ஆலோசனைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய வேளாண்சட்டங்களை எதிர்த்து தில்லியில் கடந்த பல மாதங்களாகப் போராட் டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் 26.6.2021காலை 10 மணியளவில் ஒருமைப்பாடு நாள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில், தொமுச சார்பில் கி.கணபதி, எம்.வேலுசாமி, தட்டாம்பட்டிஆறுமுகம் செல்வகுமார், அ..கணேசன், சிஐடியு சார்பில் க.முகமதலிஜின்னா, ஏஐடியுசி சார்பில் கே.ஆர்.தர்மராஜன், எம்.என். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

Top