logo
ஈரோட்டில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் ,உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் ,உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

29/Jan/2021 09:40:16

புதுக்கோட்டை,ஜன: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். 

மாநிலதுணைத்தலைவர் மணிமாலை தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள்: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள்  அனைவரையும் அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,  ஓய்வுபெறும் ஊழியருக்கு ரூ. 10 லட்சமும் உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

பணியாளர், உதவியாளர்களுக்கு உள்ளூர் பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.  3 வருட பணி முடித்த மினி மைய ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 10 வருடம் பணி முடித்த உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 


Top