logo
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 5-ஆவது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியல்- ஈரோடில் 75 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 5-ஆவது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியல்- ஈரோடில் 75 பேர் கைது

06/Feb/2021 10:51:10

ஈரோடு, பிப்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். பணியின்போது இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம் ஆர் பி செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம்  மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு  தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி  5-ஆவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் திரண்ட அரசு ஊழியர்கள் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விஜய மனோகரன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து தாலுகா அலுவலக வளாகம் முன்பு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட ஊழியர்கள் அனைவரும் வாயில் கருப்பு முகக் கவசம் அடைந்து போராட்டத்தில் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து டவுன் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 35 பெண்கள் 40 ஆண்கள் உள்பட 75 பேரை கைது செய்தனர்.

Top