logo
ஈரோட்டில் பள்ளி மாணவர்கள் 1092 பேருக்கு இலவச சைக்கிள்:அமைச்சர் செங்கோட்டையன் வழங்கல்

ஈரோட்டில் பள்ளி மாணவர்கள் 1092 பேருக்கு இலவச சைக்கிள்:அமைச்சர் செங்கோட்டையன் வழங்கல்

21/Jan/2021 10:54:00

ஈரோடு, ஜன: ஈரோடு பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாக்கள் மூலம் மாணவ, மாணவிகள் 1092 பேருக்கு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. 


ஈரோடு  பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்   மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம்,கே .எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற  விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்  பங்கேற்று  அப்பள்ளியில் பயிலும்  பிளஸ்1 ,பிளஸ்  2 மாணவிகள் 337 பேருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கினார்.


 இதை தொடர்ந்து கலைமகள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் 314 மாணவ மாணவிகளுக்கும் தொடர்ந்து காசி பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, செங்குந்தர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்களை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.


இதில், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே. சி. பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், தங்கமுத்து, ஜெயராஜ் ,கோவிந்தராஜ், ராமசாமி, முருகசேகர், பெரியார் நகர் தொகுதி அவைத்தலைவர் மீன் ராஜா, ஒன்றிய செயலாளர் பூவேந்திர குமார்,  ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார்.

மாணவரணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி, இணைச் செயலாளர்யுனிவர்சல் நந்தகோபால், ஆவின் துணைத் தலைவர் குணசேகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோட்டில் பல்வேறு பள்ளிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற  நிகழ்வுகள் மூலம் 1092 மாணவ மாணவியருக்கு ரூ.4 கோடி மதிப்பில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Top