logo
நேதாஜியின் 125-ஆவது பிறந்தநாளில் ஈரோட்டில் சமாஜ்வாடி பார்வர்டு பிளாக் கட்சி மாநாடு நடத்த முடிவு

நேதாஜியின் 125-ஆவது பிறந்தநாளில் ஈரோட்டில் சமாஜ்வாடி பார்வர்டு பிளாக் கட்சி மாநாடு நடத்த முடிவு

08/Nov/2020 05:52:57

ஈரோட்டில் சமாஜ்வாடி பார்வர்டு பிளாக் கட்சி தமிழ் மாநில ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜூ தலைமை வகித்தார்.

ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் காசிநாதன், செந்தில்குமார், சரவணன், அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஈரோட்டைத் தொடர்ந்து சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி மற்றும் தஞ்சையில் கூட்டத்தை நடத்த வேண்டும்.

ஜனவரி 23-ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திபோஸின்  125-ஆவது பிறந்த நாளில் ஈரோட்டில் தமிழ் மாநில சமாஜ்வாடி பார்வர்டு பிளாக் கட்சி பிரதிநிதிகள் மாநாடு நடத்துவது, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கட்சி அமைப்பை விரிவாக்கம் செய்யவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 


Top