logo
அந்தியூர் அருகே வனத்துறை ஊழியர் விஷம் குடித்து தற்கொலை:  பர்கூர் போலீஸார்  விசாரணை

அந்தியூர் அருகே வனத்துறை ஊழியர் விஷம் குடித்து தற்கொலை: பர்கூர் போலீஸார் விசாரணை

23/Feb/2021 07:52:55

ஈரோடு, பிப்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே வனத்துறை ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து  பர்கூர் போலீஸார்  வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி வனச்சரகத்தில் வனக்காப்பாளராக பணிபுரிந்து வந்தவர் பிரபாகரன். இவர் மதுரை மாவட்டம் புதுக்கோட்டை நாகமலை பகுதியைச் சார்ந்தவர் பணியிட மாற்றம் காரணமாக சென்னம்பட்டி  வனச்சரகத்தில் வனக்காப்பாளர் பணிபுரிந்து கொண்டு தனது  தாயார் ராஜம்மாள் உடன் அந்தியூர் பவானி ரோட்டில் கணபதி காட்டூர் பகுதியில் வசித்து வந்தார். 


தொடர்ந்து அதிகாரிகளின் தொந்தரவினால் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை அந்தியூர் வனச்சரகத்திற்குள்பட்ட கொம்பு தூக்கி மாரியம்மன் கோவில் வனப்பகுதியில் வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி மக்கள் அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

 தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற அந்தியூர் வனத்துறையினர் இறந்து கிடந்தவர் சென்னம்பட்டி வனச்சரகம் தெற்கு தண்டா சரக வனக்காப்பாளர் பிரபாகரன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து வனத் துறையினர் உடனடியாக பர்கூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த பர்கூர் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீஸார் பிரபாகரனின் பிரேதத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து உடற்கூறு ஆய்வுக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் மேற்கொண்டு வனக்காப்பாளர் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்று  போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வனக்காப்பாளர் பிரபாகரன் தனது செல்போனில் இறப்பதற்கு முன்பு ஒரு வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார் அதில் வனத்துறை அதிகாரிகள் தன்னை மிகவும் கொடுமைப் படுத்தியதாகவும் இதனால் மிகுந்த மன வேதனையில் வனத்துறை அதிகாரிகள் மீது உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார் இந்த வீடியோ பேஸ்புக் வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது

Top