logo
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 10, 12-ஆம் வகுப்புகள் தொடக்கம்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 10, 12-ஆம் வகுப்புகள் தொடக்கம்

19/Jan/2021 09:36:48

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. 

 அரசு விதிமுறைகளைப் பின்பற்றி  பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பெற்றோர்களின் ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு  ஒரு வகுப்பறைக்கு 16 மாணவர்கள் என்ற விகிதத்தில்  சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர்.

 முதல்; நாள் வகுப்புகளுக்கு வருகை தந்த மாணவர்களை பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி வரவேற்றார். டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் கே. எச். சலீம்  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று  மாணவர;களுக்கு  கொரோனா நோய்ப்பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். இதையொட்டி  மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்திக்கான மாத்திரைகள் வழங்கப்பட்டன.

 மாணவர்களை அழைத்து வந்த பெற்றோர்கள் பள்ளியின் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் நோய்ப்பாதுகாப்பு குறித்த பதாகைகளை பார்வையிட்டு பள்ளி நிர்வாகத்துக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். முன்னதாக பள்ளியின் நுழைவாயிலில் மாணவர்களுக்கு  கிருமிநாசினி மற்றும் முகக்கவசம் வழங்கி தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பிறகே வகுப்பறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.   பள்ளிக்கு வந்த மாணவர்களை துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் அபிராம சுந்தரி, கௌரி மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் அன்புடன் வரவேற்று வகுப்பறைக்கு அழைத்துச்சென்றனர்


Top