24/Dec/2020 06:37:47
ஈரோடு, டிச: தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அண்மையில் சென்னையில் நடந்த அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் 16,000 கிராம சபை- வார்டுகளில் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு இடங்களில் அதிமுக.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் கிராம சபை- வார்டு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி வீரப்பன் சத்திரம் பகுதி திமுக சார்பில் மாநகரச் செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சு.முத்துசாமி கலந்து கொண்டு பேசினார்.
கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி. சி .சந்திரகுமார், பொருளாளர் பி. கே. பழனிச்சாமி, பகுதி செயலாளர் நடராஜன் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து இனி ஒவ்வொரு நாளும் மாவட்டம் முழுவதும் கிராம சபை, வார்டு கூட்டம் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட செயலர்(தெற்கு)முத்துசாமி தெரிவித்தார்.