11/Jan/2021 08:46:32
ஈரோடு, ஜன: ஈரோட்டில் தமிழக விவசாயிகளின் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு பெருந்துறை சாலையிலுள்ள அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு. முத்துசாமி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி, மாவட்ட துணைத் தலைவர் ராஜேஸ்ராஜப்பா, தமிழக ஓசை சங்க மாநில தலைவர் ரத்தினசாமி, சிபிஎம் மாவட்ட செயலாளர் ரகுராமன், துளசிமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒப்பந்த சாகுபடி சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், கால்நடை இனப்பெருக்க சட்டம் திரும்பப் பெற வேண்டும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளை சிதைக்கும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை கொடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கமிட்டனர். முன்னதாக தில்லியில் நடைபெறும் போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.