logo
புதுக்கோட்டையில்   மார்கழி மகோத்ஸவம்: திருப்பாவை,திருவெம்பாவை பாடல் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

புதுக்கோட்டையில் மார்கழி மகோத்ஸவம்: திருப்பாவை,திருவெம்பாவை பாடல் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

04/Jan/2021 01:33:34

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில்  தைலா  நகரில்  மார்கழி மகோத்ஸவ  விழா துணை ஆட்சியார் ஓய்வு சுந்தர்ராஜன் ஐயங்கார் நினைவாக   திருப்பாவை , திருவெம்பாவை பாடல் போட்டி நடைபெற்றது.

 நிகழ்ச்சிக்கு, இசையாசிரியை சௌமியா தலைமை  வகித்தார். சித்ராசுந்தர்ராஜன்  வரவேறார். ஆசிரியர் ரகுராமன்      திருப்பாவை பாடல் திருவெம்பாவை பாடல் போட்டியி னை   தொடங்கி வைத்துப் பேசினார்.  பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ,மாணவிகள்  கலந்து கொண்டு பாடினர். இசையாசிரியை சௌமியா, ராணியார்பள்ளி ஆசிரியை கஜலெட்சுமி மற்றும் சித்ரா வைத்தியநாதன் ஆகியோர் நடுவர்களாக இருந்து வெற்றியாளர் களைத்தேர்வு செய்தனர்.

இதில் முதல் பரிசு மாணிக்க நந்தினிக்கும் இரண்டாம் பரிசு மனோ ஈஸ்வரனுக்கும்    மூன்றாம் பரிசு நிவேதா நித்யஸ்ரீ, அக்ஷயாவுக்கும் கிடைத்தது. அனைவருக்கும் சுந்தர்ராஜன் நினைவுப் பரிசுகளை  சித்ரா, இசையாசிரியை சௌமியா ஆகியேர் வழங்கி வாழ்த்தினர்.

விழாவில் வைத்தியநாதன், பிராமணர் சங்க நிர்வாகி சுப்புலெட்சுமி, அப்பர் நடுநிலைப் பள்ளி ஆசிரியை நிர்மலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவாக நந்த கிஷோர் நன்றி கூறினர் 


Top