logo
தமிழகத்தில் மதுரை உள்பட  27 மாவட்டங்களில் வரும்  28.6.2021 முதல்  50%  பயணிகளுடன் பேருத்துகள் இயக்கம்: அரசு அறிவிப்பு

தமிழகத்தில் மதுரை உள்பட 27 மாவட்டங்களில் வரும் 28.6.2021 முதல் 50% பயணிகளுடன் பேருத்துகள் இயக்கம்: அரசு அறிவிப்பு

26/Jun/2021 11:31:57

சென்னை, ஜூன்: தமிழகத்தில் மதுரை,புதுக்கோட்டை, இராமநாதபுரம்சிவகங்கை, திருச்சி  உள்பட  27 மாவட்டங்களில் வரும்  28.6.2021 முதல்  50%  பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்ட தகவல்:


கோவிட் - 19 நோய்த் தொற்றின் காரணமாக அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை 28.05.2021 முதல் 05.07.2021 வரை நீட்டித்து  தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த உத்தரவில், வகை 2-ல் குறிப்பிட்டுள்ளவாறு அரியலூர், கடலூர். தருமபுரி திண்டுக்கல். கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி,மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை இராமநாதபுரம். இராணிப்பேட்டை சிவகங்கை.

தேனி, தென்காசி. திருநெல்வேலி, திருப்பத்தூர். திருவண்ணாமலை, தூத்துக்குடி திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும் பொதுப் பேருந்து போக்குவரத்தினை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிட குளிர் சாதன வசதி இல்லாமல், 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்துள்ளார்கள்.

ஏற்கெனவேவகை 3-ல் குறிப்பிட்டுள்ளவாறு சென்னன, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கிடையே பொதுப் பேருந்து போக்குவரத்தினை, நிலையான வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றி, சாதன இல்லாமல் 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்து தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் ஏற்கெனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன் கூடுதலாக 23 மாவட்டங்கள் என ஆக மொத்தம் 27 மாவட்டங்களில், வரும் 28.6.2021 காலைமணி முதல், 50 சதவிகித இருக்கைகளுடன், மாவட்டங்களுக் குள்ளேயும் மாவட்டங்களுக்கு இடையேயும்  பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள  மொத்தம்  19,290 பேருந்துகளில், மாநகர் போக்குவாத்துக் கழகத்தின் சார்பில் 2200 பேருந்துகளும், அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 355 பேருந்துகளும், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2.210 பேருந்துகளும் சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 513 பேருந்துகளும்.

கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1,592 பேருந்துகளும். மதுரை அரசுப் போக்கு வரத்துக் கழகத்தின் சார்பில் 1300 பேருந்துகளும் மற்றும் திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1153 பேருந்துகள் என மொத்தமாக  9.333 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு இயக்கப்படுகின்ற பேருந்துகளை உரிய முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து அரசு  விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்கிடுமாறு போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு விதித்துள்ள வழிக்காட்டு முறைகளா  கட்டாய முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியிளைப் பின்பற்றி பயணிக்க வேண்டும் என்று அதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Top