logo
சாலை விபத்தில் புதுகை ராயல் என்பீல்டு ஷோரூம் மேலாளர் பலி.

சாலை விபத்தில் புதுகை ராயல் என்பீல்டு ஷோரூம் மேலாளர் பலி.

31/Dec/2020 06:10:01

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே புதன்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் ராயல் என்பீல்டு விற்பனை நிலைய மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  ஆலங்குடி அருகேயுள்ள வேங்கிடகுளத்தைச் சேர்ந்தவர் ஆர்.செம்பையா(27). புதுக்கோட்டையில் உள்ள  ராயல் என்பீல்டு விற்பனை நிலையத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்த இவர், புதன்கிழமை இரவு பணி முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, கடையான்தோப்பு பகுதியில் சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள், செம்பையாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த செம்பையா அந்த இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த நம்பன்பட்டி காலணியைச் சேர்ந்த எஸ்.இளையராஜாவிற்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர் விபத்து ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை தள்ளிச்சென்று அப்பகுதியில் மறைத்து வைத்துவிட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். மறைத்து வைத்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, ஆலங்குடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Top